Wednesday, September 2, 2009

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2009-2010ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்காணும் அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம்.

இவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசு ஆணையிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகக் கீழ்க்கண்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அரசு சார்ந்த உறுப்பினர்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அரசு நலத்துறை செயலாளர்,
நிதித்துறை முதன்மைச் செயலாளர்,
வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர்,
சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்,
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,
தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்,
சிறுபான்மை நலன் ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர்
ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,
மாநில பொதுச் செயலாளரும் மவ்லவீ அப்துல் காதர்,
மாநில பொருளாளர் மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா,
மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ,
திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹுத்தீன்,
வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ்,
மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்,
சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாமான மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ்,
மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் நாஜி,
குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்யூப்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்,
தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ்,
தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி பேக்,
தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன்,
சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி
ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனைகளை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்குவதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை.
இயற்கை மரணத்திற்குள்ளானவர் குடும்பத்திற்கு உதவித் தொகை ரூ. 15 ஆயிரம்.
கல்வி உதவித் தொகை
10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,500
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500,
முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500,
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750,
முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.2 ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.
தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
தொழிற் கல்வி மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம்,
ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000,
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200,
திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம்.
மருத்துவ உதவித் தொகை
மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய்,
கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000,
மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.400.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்.

18 வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவராவார்.

தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந் நலவாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களைத் தொகுத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள் / வக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வாங்குவார்.

நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப்பினர்களுக்கு நல உதவிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப்படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப படிவம், வாரியத்தின் விதிமுறைகள், வாரியத்தின் இதர செயல்பாடுகள் முதலிய அனைத்திற்கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும்.

மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

அரசு / அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது.

வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.

சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக்கப்படும் இந்நலவாரியத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படி / பயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.

மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணிகளை மேற்கொள்வதற்காகவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: தமிழ்நாடு மாநில இ.யூ. முஸ்லிம் லீக்

Sunday, August 30, 2009

Taraaweeh 20 Raka'ath



Taraaweeh

Special prayer offered in the month of Ramadan

Table of Content

· Background

· Sunnah

· Meaning of Taraaweeh

· A Logical Confirmation of Sahaaba’s practice

· The recent Misconception of 8 rak’aat…

· Those who still claim

· Consensus of Ummah (Sahaaba, Mujtahideen, Ulma)

· Hadith to remember

· Conclusion

· Humble Appeal


Background

· The Prophet sallAllahu alaihi wa sallam led Salat Al-Taraweeh for three nights, but did not come out to lead the same on fourth night with the fear that it might become an obligation on the Ummah. [Sahih Bukhari & Muslim]

· From the time of Umar radiAllahu anhu it got established to perform 20 rak’aat taraaweeh in congregation, which was continued by later people (till now). [Al-Baihaqi, Tirmidhi, Kanzul Ummal, Ibn Munie’…]

Sunnah

· Ibn abi Shaibah, Tabrani in Kabeer, Baihaqi, Abdullah ibn Hameed & Imam Bagwi rahmatullahi alahim ajama’een reported on authority of Ibn Abbas radiAllahu anhu “Indeed Prophet sallaAllahu alahiwasallam used to perform 20 rak’aat apart from Witr in the month of Ramadan” Al-Baihaqi added ‘without congregation’

· Hafiz Ibn Hajar rahmatullah alaih, (well-known interpreter of Sahih Al-Bukhari) reported in his book Al-Talkhees Al- Habeer on the authority of Aisha radhiallahu anha that the Prophet sallAllahu alaihi wasallam performed twenty rak'aat Taraweeh on those three nights.

· To conclude: 20 rak’aat Taraaweeh is emphasized (Mu’akkedah) Sunnah for both men (more virtuous with congregation) & women.


Meaning of Taraaweeh

· The Arabic word Taraaweeh is the plural of the word Tarweeh which literally means to have rest or break.

· In the context of Taraaweeh prayer, it means to have rest or break between every four rak’aat.

· In eight rak’aat followed by Witr we get only two rests, which should be called as Tarweehatain/Tarweehain (Two rest periods).

· According to the Arabic language anything less than three is NOT plural. (There are different words for single, double, plural)

A Logical Confirmation of Sahaaba’s Practice

· There are 540 Ruku’ in Quran

· If we divide 540 (rak’aat) with 27 (days) to complete the Quran recitation in Ramadan.

· The result we would get will be:

*20 rak’aat *


The recent Misconception of 8 rak’aat…

1. Base of the Confused sect about idea of 8 rak’aat:

­ Bukhari’s narration: Abu Salamah bin Abdul Rahman asked Aisha Siddiqua Radiallahu anhuma “how was the prayer of the Prophet sallAllahu alaihi wasallam during Ramadan?” She Radiallahu anha replied, “The Prophet sallAllahu alaihi wasallam never performed more than eleven raka’aat, whether in the month of Ramadan or any other time of the year.”

Ø Reason for misconception

v Self opinioned interpretation of the Hadith

Ø Correct explanation

v The mentioned Hadith talks about Tahajjud not Taraaweeh. Note the words “whether in the month of Ramadan or any other time of the year”

v Everyone knows that Taraaweeh prayer is performed only in Ramadan.

2. Another base:

­ Muwatta’s narration: Hadrat Umar ordered Ubayy ibn Kaa'b radiAllahu anhuma to lead the people with 11 rak'aat.

Ø Reason for misconception

v Incomplete view for self-satisfaction

Ø Correct explanation

v The mentioned Hadith is Mudtarib (A Hadith transmitted in different manners so that the contents of each transmission clashes with other)

Thus it is unsound and insufficient evidence for the deduction of any Shara’ee ruling.

Visit: http://www.ummah.net/Al_adaab/fiqh/tarawih8or20.html for detail


Those who still claim

Ø People who claim 8 rakaat to be Sunnah should first prove the same through marfu’ hadith from Sihaah Sittah.

Ø They must perform Taraaweeh in congregation for 3 days ONLY as they claim to follow Prophet sallAllahu alaihi wasallam directly leaving consensus.

Ø Or simply accept that

They are actually Ahlul-hawa (people of desire)

Consensus of Ummah *Sahaaba*

Ø From the time of Umar radiAllahu anhu to this day, people have always prayed twenty rak’aat Taraweeh throughout the world, including Harmain Sharifain.

Ø Hadrat Umar, Uthman, Ali and all Sahaaba radiAllahu anhum unanimously practiced 20 rak’aat.

Ø There is no objection recorded in any authentic book from our beloved mother Aaisha radiAllahu anha or any other Sahaaba radiAllahu anhum.

Consensus of Ummah *Mujtahideen*

Ø Imam Abu Hanifah, Imam Shaf’ee and Imam Ahmed bin Hanbal Rahmatullahi alaihim ajma’een have declared that Taraaweeh consists of twenty rak’aat.

Ø Imam Malik Rahmatullah Alaih on the other hand insisted on thirty-six raka’aat followed by Witr at Madinah.

o The reason being - when people of Makkah would perform tawaaf after every four rak’aat at the same time people at Madinah would perform additional four rak’aat nafl (not Sunnah) to make up for more thawaab.

Consensus of Ummah *Ulema*

Ø Ulema (Scholars) across the world asserts 20 rak’aat Taraaweeh as Sunnah. Few names:

ü Imam Tirmidhi in his Saheeh

ü Abu Bakr Ahmad ibn Husayn al-Bayhaqi in his Sunan

ü Ibn Hajr Asqalani in Fath-ul-Bari

ü Imam Ghazaali in Ahyaa-ul-Uloom

ü Imam Nawawi in Sharh-ul-Muhazzab

ü Imam Subki in his Sahih

ü Ala al-Din Ali ibn Abd-al-Malik in Kanz-ul-Ummal

ü Mulla Ali Qari in Mirqaat

ü Shaykh Badruddin Al-Aini in Umdatul Qari

Hadith to remember

Ø Rasoolullah sallAllahu alaihi wasallam said:

v My Ummah will be fragmented into seventy-three sects, and all of them will be in Hell fire except one sect. The companions asked Allah’s messenger which group that would be. He sallAllahu alaihi wa sallam replied, It is the one to which I and my companions belong [Tirmidhi, Abu Dawood & Hakim]

v My Ummah will not agree upon an error, so when you find dispute, then follow the largest group (Sawaade Aazam). [Hakim & Ibn Majah]

Conclusion

Ø The Sunnah of Taraweeh consists of twenty rak’aat only.

Ø Whole Ummah (Sahaaba, Mujtahideen, Scholars) anonymously accept Twenty rak’aat Taraaweeh to be Sunnah through out the world including Haramain Sharifain (even now).

Ø The people who object in the matter after 1400 years & call 8 rak’aat as Sunnah are actually Ahle Bida’ (those who make evil innovations) as it is against Sunnah and Ijmaa’.

Humble Appeal

If you agree with the content, please forward this to all your contacts.

Please request all your contacts to perform Salaah behind Sunni Imams only.

May Allah safeguard our Imaan from all devious Ideologies.

Aameen bijaahin Nabiyyil Kareem.

Feel free to send your feedbacks to: imran.ansari63@gmail.com

Monday, June 15, 2009

நாவைப் பேணுதல்

நாவைப் பேணுதல்
ஒரு மனிதன் நினைத்தால் ஒரு சமூகத்தையே ஒன்று படுத்திடவும் இயலும், பிளவு படுத்திடவும் இயலும். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உதவுவது நாக்கு தான். சின்னஞ்சிறிய இந்த உறுப்புத்தான் பெரும் குழப்பங்கள், பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள் உருவாகவும் அவற்றை களையவும் பயன்படுகிறது.
இந்த நாவின் மூலம் ஏற்படும் நன்மைகளை மட்டுமே மனித சமூகம் அடைய வேண்டும். அதன் தீமைகளை அடையக் கூடாது.
‘நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. எவர்கள் இவற்றிலிருந்து மீளவில்லையோ அத்தகையவர்கள் அநியாயக்காரர்களாவார்கள்’.
‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீள்வதை ஏற்றுக்கொள்பவன். நிகரற்ற அன்புடையோன்.’ (அல் குர்ஆன்- 49:11,12)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல் குர்ஆன்-61:2,3)
‘குறை கூறிப் புறம்பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்’.(அல்குர்ஆன்-104:1)
‘அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக்காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை, கவலைப் படவும்மாட்டார்கள்’.(அல் குர்ஆன்-2:262)
‘…..பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்’.(அல் குர்ஆன்-22:30)
ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான், ஆனால் அதைப்பற்றி நல்லதா? கெட்டதா? என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் புறம் பேசுதலைப் பற்றி கூறினார்கள்.
உனது சகோதரன் எதை வெறுப்பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும். அப்போது, நான் கூறுவது எனது சகோதரனிடத்தில் இருந்தால்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ சொல்வது உனது சகோதரனிடத்தில் இருந்தால் நீ புறம் பேசியவனாய் கருதப்படுவாய். நீ சொல்வது அவனிடத்தில் இல்லையெனில் நீ அவதூறு கூறியவனாய் கருதப்படுவாய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)
ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)
கோள் சொல்லுபவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
14உங்களுக்கு பெரும்பாவங்களை அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் அறிவியுங்கள் என்று நாங்கள் கூறினோம்.
அல்லாஹ்விற்கு இணைவைத்தல். பெற்றோரை வேதனை செய்தல். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு சாய்ந்திருந்த நபி(ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து பொய்யான சொல்லும் தான் என்று கூறினார்கள். நிறுத்தமாட்டார்களா என்று நாங்கள் என்னும் அளவிற்க்கு அந்த வாசகத்தை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள்.(நூல்-புகாரி)
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனையுன்டு என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அந்த நபர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், தனது கீழாடையை (பெருமைக்காக கரண்டைக்கு கீழ்) தொங்கவிடுபவன். (தான் செய்த தருமத்தை) சொல்லிக் காட்டுபவன். பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)
ஒரு மனிதர் இன்னொரு மனிதனை பாவி என்றோ, காஃபிர் என்றோ சாட வேண்டாம். ஏனெனில் குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் பக்கமே திரும்பி விடும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
யார் தன் சகோதரன் பற்றி கூறப்பட்ட குறையை மறைக்கின்றாரோ அவரது முகத்தைவிட்டும் நாளை மறுமையில் அல்லாஹ் நரகத்தைத் தடுத்துவிடுவான்.(நூல்-அஹ்மத்)
புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று அவர்கள் தொழுதாலும், நோன்பு வைத்தாலும், தான் ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே. 1.பேசினால் பொய்யுரைப்பான். 2.வாக்களித்தால் மாறு செய்வான். 3.நம்பினால் மோசம் செய்வான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி, முஸ்லிம்)
மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்க்காகப் பொய் கூறுபவனுக்கு கேடு உண்டாவதாக! அவனுக்கே கேடு, அவனுக்கே கேடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)
மாபெரும் சதி யாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்;) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்-புகாரி)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள் அவர்களது குறைகளைத் ஆராய்ந்து கொண்டிராதீர்கள் யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திருகின்றாரோ அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்-அஹ்மத்)
அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்-புகாரி)
ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி)

Sunday, June 7, 2009

10 Easy sunnats

Assalamualaikum,

10 Sunnats for us to Bring Alive
Source: talimiboardkzn. org


The rewards of practicing sunnah of Rasulullah [Sallallahu Alayhi Wasallam] is so abundant, one just cannot imagine the rewards Allah Ta'ala has kept in store for the one who adheres strictly to the sunnah.

The greatest reward one will receive for adopting the sunnah practices of Rasulullah [Sallallahu Alayhi Wasallam] is that we will acquire the love of Allah Ta'ala and He will forgive our sins.

Listed hereunder are 10 easy sunnats with the rewards mentioned in the Hadith for us to bring alive this year.

May Allah Ta'ala allow us all to live in accordance with the sunnah of our beloved Rasulullah [Sallallahu Alayhi Wasallam].

1. To recite Bismillah wal Hamdulillah before commencing wudhu.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has mentioned that a person who recites this dua before making wudhu, the Angels continue writing down rewards for him as long as he remains in the state of wudhu.
2. Using of the Miswaak before wudhu.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that the miswaak cleans the mouth and pleases our Rabb (Allah Ta'ala).

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that a person who makes miswaak before making wudhu and performs two rakaats salaah is better than that person who performs 70 rakaats salaah without making miswaak.

 *   It will enable one to recite the Kalimah Shahaadah at the time of death.

 *   More than 70 benefits of using the miswaak have been listed.
3. To recite the following dua after wudhu:

اَشْهَدُ اَنْ لاَّ اِلهَ اِلاَّ اِلله ُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

 *   The eight doors of Jannah are opened for the one who recites this dua and he will have the choice of entering from whichever door he wishes.
4. To sleep with wudhu.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that a person who makes wudhu before sleeping and passes away in this condition, is elevated to the rank of a martyr (Shaheed).

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that a person who makes wudhu and then goes to sleep, his rooh ascends to the arsh (throne) of Allah Ta'ala and remains in sajdah for as long as he is asleep.
5. To go walking to the Masjid for salaah.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has mentioned that a person who makes wudhu at home and then goes walking to the musjid to fulfil a Fardh Salaah, for every step that he takes towards the musjid, one sin will be forgiven, and he will be raised up one stage higher in Jannah.

 *   When he performs his salaah, the Angels continue making dua for him as long as he is in the Musjid, "O Allah, have mercy upon him, O Allah send your special salutations upon him."

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that a person who goes walking to the musjid in the morning or evening, Allah Ta'ala prepares for him an abode in Jannah every time he goes out (for salaah).
6. Performing salaah in the first Saff.

 *   The first saff is like the saff of the malaaikah.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] said, "If only you knew the reward of sitting in the first saff, you would have had to draw lots."

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] said, "If only you knew the virtue of the first saff, you would race with one another in order to get there first."
7. To recite Tasbeeh-e-Faatimi (33 times subhaan Allah, 33 times Al-hamdulillah and 34 times Allahu Akbar) after every Fardh salaah and at the time of going to bed.

 *   Once the poor Muhaajireen came to Rasulullah [Sallallahu Alayhi Wasallam] and complained that they were unable to compete with the wealthy Sahaabah because the wealthy Sahaabah gave Sadaqah and freed slaves, both of which they could not do. Rasulullah [Sallallahu Alayhi Wasallam] said to them, "Should I not teach you something which will allow you to reach those who have surpassed you and it will allow those who are behind you to surpass you. There will be no one who will be more virtuous than you except for those who practice upon this." They said, "Yes, O Rasulullah [Sallallahu Alayhi Wasallam]." Rasulullah [Sallallahu Alayhi Wasallam] then said, "Recite tasbeeh [subhaan Allah] 33 times, tahmeed [Al-hamdulillah] 33 times and takbeer [Allahu Akbar] 34 times after every salaah."

 *   All ones sins are forgiven, even if they are equal to the foam of the ocean.

 *   For every subhanallah that one will recite, Allah Ta'ala will plant a tree in Jannah for that person.
8. To recite durood shareef 1000 times on a Friday.

 *   One who recites Durood Shareef one thousand times on a Friday, will most certainly see his abode in Jannah before death.
9. Reciting the Qur'aan Shareef daily in one's home.

 *   Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said that the house wherein there is no tilaawat of the Qur'aan is like a desolate house.

 *   The virtue of the kalaam of Allah Ta'ala over all the other kalaam is like the virtue of Allah Ta'ala over all His creation.
10. Recite the following dua when in shopping centres:

لاَ اِلهَ اِلاَّ الله ُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِ

وَيُمِيْتُ وَهُوَ حَيٌّ لاَ يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ


 *   Whosoever recites the above dua will receive 1 million rewards, 1 million of his sins will be forgiven and his ranks will be raised a million times in Jannah. Furthermore a palace will be built for him in Jannah.
Note: Rasulullah [Sallallahu Alayhi Wasallam] has said: "The best of places in the sight of Allah Ta'ala are the masaajid and the worst of places in the sight of Allâh Ta'ala are the shopping centers."

Sunday, January 11, 2009

மக்தூமிய்யா ஆலிம்கள் பேரவை அறிமுகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்து லில்லஹி ரப்பில் ஆலமீன், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மத்தின் வ அலா ஆலிஹி அஜ்மயீன்...

இது மக்தூமிய்யா அரபிக்கல்லூரியில் பட்டம் பெற்ற மானவர்கள் நடத்தும் பேரவை...

.... இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்